பிரான்ஸில் நடைபெற்ற குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய சில அற்புதமான கருத்துக்களை முகநூலில் காணக்கிடைத்தது. (நன்றி: யோகு) சிலிர்த்துப்போய் கணனியின் மீது சில்லறையை விட்டெறியாததுதான் குறை. பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே போகிறார். அடுத்த அன்டன் பாலசிங்கம் கணக்கில் பேசுகிறார். நடு நிசியில் கனவு காலைந்து எழுந்திருந்து பிதற்றுவதைப்போல, ஒரு பெரும் விடுதலைப்போராட்ட அமைப்பின் முக்கியமான முடிவுகள் குறித்தெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிதள்ளுகிறார். இப்போதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பை யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்களே, குணா கவியழகன் எல்லாம் ஒரு பொருட்டா என்ன? இருந்துவிட்டு போகட்டும். முன்னுக்கு இருந்து கேட்பவர்கள் எல்லோரும் கதிரை நுனியில்தான் கிடக்கிறார்கள்.
(“கர்ப்ப நிலத்தில் சிந்திய சர்ப்ப விடம்” தொடர்ந்து வாசிக்க…)