‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’

மியான்மார் அரசாங்கம், மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில், கண்ணிவெடிகளைப் புதைத்துவருவதாக, பங்களாதேஷ் அதிகாரிகள் சிலரை மேற்கோள்காட்டி, றொய்ட்டெர்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக, அங்கிருந்து தப்பி, பங்களாதேஷை அடைந்துள்ள றோகிஞ்சா முஸ்லிம்கள், திரும்பவும் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நம்புவதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பித்த வன்முறைகளைத் தொடர்ந்து, குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, 125,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்குத் தப்பியுள்ளனர். இதன் காரணமாக, மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

(“‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் ??

பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் தெரியுமா??

‘இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காண நான் தான் கருணாவினை அனுப்பிவைத்தேன்’ என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
”அப்போது நாட்டின் சனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் வெளிநாட்டில் இருந்தார்கள். அந்தப் போர் முடிவடையும் என்று நாங்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் எங்களுக்கு வந்துகொண்டே இருந்தன. பிரபாகரன் அவர்களை உயிருடன் காப்பாற்றி கப்பல்மூலமாவது கொண்டுவரவேண்டும் என்ற தேவை பலருக்கு இருந்தது. பலர் அதை விரும்பினர். ஆனால் 18 ஆம் திகதியே போர் முடிந்துவிட்டது.

(“பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் ??” தொடர்ந்து வாசிக்க…)

நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?

(காரை துர்க்கா)

ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது.

(“நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?” தொடர்ந்து வாசிக்க…)

நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்

(Ahilan Kadirgamar)

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஏற்பட்ட பூளோக பொருளாதார நெருக்கடி, உலகைத் தொடர்ந்தும் சின்னாபின்னப்படுத்துகிறது. பூகோள பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் பாரிய வீழ்ச்சியும், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. மறுபுறத்தில், இந்த நெருக்கடியின் விளைவுகள், ஜனரஞ்சக சர்வாதிகாரத்தின் தோற்றத்தையும் உறுதிப்படுத்தலையும் நெறிப்படுத்துகின்றன.

(“நவதாராளவாதமும் சர்வாதிகார ஜனரஞ்சகவாதமும்” தொடர்ந்து வாசிக்க…)

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!

(பஷீர் சேகு தாவூத்)
தீய முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

(“வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும்!” தொடர்ந்து வாசிக்க…)

பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

(“பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’

மியான்மாரின் குழப்பத்துக்கு மத்தியில் காணப்படும் வடமேற்குப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள், இராணுவத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மியான்மார் அரசாங்கம் கோரியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அரண்கள் மீது, ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ராக்கைனில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையிலேயே, மியான்மார் அரசாங்கத்தின் இக்கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“‘ஆயுததாரிகளைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒத்துழையுங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் மக்களோடு மக்களாய்

03/09/2017 இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் பெண்களுடன் கலந்துரையாடலும் பதிவுகளும் நடைபெற்றன. அத்துடன் வந்தவர்கள் எல்லோருக்கும் மதிய உணவும் போக்குவரத்திற்கான செலவும் கொடுக்கப்பட்டன. தோழர சுகு தோழர் ஞானசக்தி போன்றவரi;களுடன் திருகோணமலையின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்தவரகள் கலந்துகொண்டனர். ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாக இது காணப்படுவதாக மக்கள் பேசிக் கொண்டனர். திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்த தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் காரியாலயத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது

“கேரள டயறீஸ்“

யாழ்ப்பாணத்தில் வெளியிப்படவுள்ள “கேரள டயறீஸ்“ புத்தகத்தைப்பற்றித் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். ஏறக்குறைய இது ஒரு வதந்தியே. மெய்யான அழைப்பிதழை பிழையாக உருமாற்றம் செய்து, தவறான விதத்தில் குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு சிறிய குழு செயற்படுகிறது. அந்தக் குழுவின் அரசியல் உள் நோக்கம் மிகக் கீழ்த்தரமானது. வதந்தி எப்போதும் தீமைகளையே விளைவிப்பதுண்டு. அது ஒரு தொற்றுநோய் என்பது சமூக வரலாற்று அனுபவம்.

(““கேரள டயறீஸ்“” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை இடம்பெற்ற பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளாக குறித்த பஸ் சேவை இடம்பெறாமையால் மக்கள் பல்வேறு அ​சௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

(“மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)