மியான்மார் அரசாங்கம், மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில், கண்ணிவெடிகளைப் புதைத்துவருவதாக, பங்களாதேஷ் அதிகாரிகள் சிலரை மேற்கோள்காட்டி, றொய்ட்டெர்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக, அங்கிருந்து தப்பி, பங்களாதேஷை அடைந்துள்ள றோகிஞ்சா முஸ்லிம்கள், திரும்பவும் நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நம்புவதாக, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பித்த வன்முறைகளைத் தொடர்ந்து, குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, 125,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்குத் தப்பியுள்ளனர். இதன் காரணமாக, மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
(“‘பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடிகளை புதைக்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)