பிஹார் தேர்தல் முடிவும் கைநழுவிய பிறந்த நாள் பரிசும்!

பிஹாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்குச் சில நிமிடங்கள் முன்புவரை வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக இந்தி செய்தி சேனல்கள் தேஜஸ்வியின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. அடுத்த முதல்வர் தேஜஸ்விதான் என ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தன.

நிதீஷை நிம்மதியிழக்க வைத்த சிராக்: முள் கிரீடமாகும் முதல்வர் பதவி!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பல திருப்பங்களை மட்டுமல்ல, விநோதமான யுத்தங்களையும் பார்க்க முடிந்தது. அவற்றில் முக்கியமானது லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாருக்கும் இடையிலான துவந்த யுத்தம். இரண்டு பேர் நேருக்கு நேர் மோதிக்கொள்வதுதான் துவந்த யுத்தம். எனினும், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த யுத்தத்தில் இன்னொரு சக்தியின் கையும் இருந்ததாகவே இன்றுவரை கருதப்படுகிறது.

தமிழ்த் தேசிய அரசியலில் ‘மூளை’யின் வகிபாகம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

எதிரி அசுர பலத்துடன் இருக்கும் போதுதான், தமிழ்த் தேசிய அரசியல் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி, செயற்பட ஆரம்பிக்கின்றது. எதிரி ஒப்பீட்டளவில் சிறிதாகப் பலமிழந்தால் போதும், மூளைக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்த் தேசிய அரசியல் தனக்குள் குத்து வெட்டுப்படத் தொடங்கிவிடும். தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்ற காலம் முதல், இதுதான் நிலை.

பைடன் வந்துவிட்டார்; இனி உலகில் சமாதானம் மலருமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே, பெரும்பாலானோர் எதிர்பார்த்ததைப் போல், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிஹார் தேர்தல் பாஜக வெற்றி

பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சித் தொண்டர்பகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பொலிவியாக்குள் மீள நுழைந்த இவா மொராலெஸ்

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸ் கடந்தாண்டு இறுதி முதலிருந்த ஆர்ஜென்டீனாவிலிருந்து எல்லையைக் கடந்து நேற்று மீண்டும் பொலிவியாவுக்குச் சென்றுள்ளார்.

செட்டிக்குளம் பிரதே சபையை மீட்க தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா – செட்டிக்குளம் பிரதேச சபையை மீட்க தமிழ்த்; தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா என்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன அதிகாரிகள், இந்தியர்களுக்கு கொழும்பில் கொரோனா

இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.

இலங்கை: 15 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

நாட்டில் மேலும் 309 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தக் கொரோனா
தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் – கோட்டாபய ராஜபக்ஷ

எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக மக்களின் ஒத்துழைப்பே தேவை மக்களை தெளிவுபடுத்துவது ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும்சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் கடமையாகும் என்றார்.