‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!

(Yalini)

யாழ்ப்பாண ‘கம்பஸ் சயன்ஸ்பக்கல்றி டீன்‘ ஆக இருப்பவர் சற்குணராசா. 1996-2000ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆமி‘க்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது ‘கம்பஸ்சில‘ படிக்கிற பொடியல் இவருக்கு வைத்த பட்டம் ‘சக்கர்‘. அந் நேரம் ‘சக்கர்‘ கோவில் வீதியில் நல்லுாருக்கு அருகாமையில் ‘கந்தன்கருனை‘ என்ற வீட்டுக்கு அருகில் உள்ள மேல்மாடி வீட்டில் வசித்து வந்தார். அந்நேரம் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் போராளிகளில் இருவர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கும் முகாமைத்துட பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வந்தார்கள். இப் போராளிகளில் ஒருவரின் சொந்த இடம் மன்னார். இன்னொருவர் கிளிநொச்சி. இரு போராளிகளும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கிலோமீற்றர் துாரத்தில் இருந்த வயோதிபத் தம்பதிகளி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.

(“‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!” தொடர்ந்து வாசிக்க…)

இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்

(சுகு, சமரன்)

இலங்கையின் சிங்கள தமிழ் அரசியல் தலைமைத்துவத்துவங்களிடம் பொதுவான போக்கொன்று நிலவுகிறது. தேசிய இனப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இதய சுத்தியான அக்கறைகள் இவர்களிடம் கிடையாது. விதிவிலக்குகள் இருக்கலாம். இனப்பிரச்சனை நீடித்து நிலவுவது தமது அதிகாரக் கைப்பற்றல் அரசியலுக்கு உதவும் என்பது இவர்களின் திடமான நம்பிக்கை. இந்த அற்பத்தனம் இலங்கை சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு என்றென்றும் தடையாகவே இருக்கும் – சுகு சறீதரன்

(“இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(19)

(மாணவர்களை நெருங்கிய காலன்)

2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் போர் பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு பயிற்சியை பெற்றுக்கொள்ள விருமபாதவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதே சிரமம் என்கின்ற நிலையை புலிகள் உருவாக்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(19)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 54 )

திருகோணமலை உணவுக்களஞ்சியங்களில் இருப்பு பற்றாக்குறைகள் வர சந்தர்ப்பங்கள் இல்லை.ஒவ்வொரு கப்பலில் வரும் உணவுகளில் மேலதிகமாக இரண்டு மூன்று தொன் உணவுகள் வரும்.பல அதிகாரிகள் இவற்றை கணக்கில் காண்பிப்பது இல்லை.ஆனால் பற்குணம் இவற்றையும் சேர்த்து விடுவார் .பொதுவாக திருகோணமலை துறைமுகத்தில் குறைந்தது பத்துக் கப்பல்களிலாவது உணவு வரும்.இவற்றை எல்லாம் நேரடியாக பற்குணமே பொறுப்பேற்பார்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 54 )” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல், முன்னொருபோதும் இல்லாத‌வாறு ப‌ல‌ திருப்ப‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌வுள்ள‌து. ஹிலாரி கிளின்ட‌ன் தேர்த‌ல் செலவுக‌ள் ப‌ற்றிய‌ இர‌கசிய‌ ஆவ‌ண‌ங்க‌ள் வெளியிடப் ப‌டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவ‌ன‌ர் ஜூலிய‌ன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

(“அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்து வாசகர்களிடையே….

ஈழத்து வாசகர்களிடையே அல்லது படைப்பாளிகளிடையே ஜெயமோகன் சாருநிவேதா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது எழுத்துக்களைப் படிப்பது அல்லது அவர்களையிட்டுப் பேசுவது ஓர் அந்தஸ்த்துக் குறியீடாக (status of sympolic) இருக்கின்றது. உண்மையில் இவர்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தினவா?

(“ஈழத்து வாசகர்களிடையே….” தொடர்ந்து வாசிக்க…)

2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)

திருகோணமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி அறைகூவல்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (07.08.2016) திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூடி அந்த கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து வடக்கு கிழக்கு எங்கும் வட்டாரங்கள் தோறும் அடிப்படைக் கிளைகளை அமைத்து ஒரு பரந்து பட்ட மக்களின் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற தீர்மானம் எடுத்திருந்தது. அதன் பிறகு தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு புதிய அரசியல் கட்சியாக பதிவதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையாளருடன் பேச்சு வார்த்தையும் நடாத்தப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த பதிவுக்கான முறையான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதற்கான பதிவு மிகவிரைவில் நடைபெறும் என்று நம்புகின்றோம்.

(“2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம்!

 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உணரும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும், இதேவேளை, அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியானது, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கான முதலாவது கூட்டம், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாளும் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் விரைவில் பதிவு நடைபெறுமெனவும் கூறினார்.

(“ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்” தொடர்ந்து வாசிக்க…)

திராய்க்கேணி படுகொலைகள்

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

(“திராய்க்கேணி படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)