(“வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி காரணமல்ல” தொடர்ந்து வாசிக்க…)
அனைத்து சூத்திரம் வாசகர்கள் நண்பர்கள் தோழர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
வரலாற்றில் இன்று: ஜனவரி 01
1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.
1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.
1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.
1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.
1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்துக்கு பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.
1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.
1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.
1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.
1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.
2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.
2008: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.
2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.
அவசியம் அனைவரும் படிக்கவும்
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ! 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)
எதிர் வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுடரும் மெழுகுதிரிச்சின்னத்தில்மட்டுநகர் மாநகரசபை- மட்டுநகர் மண்முனைமேற்குபிரதேச சபை-திருமலைநகர சபை -திருமலைபட்டினமும் சூழலும் பிரதேச சபை -சாவகச்சேரிநகர சபை-சாவகச்சேரிபிரதேச சபை-ஆகிய6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயககட்சிபோட்டியிடுகிறது.
(“மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)
அறிவித்தார் ரஜினி
இரண்டு தசாப்தகால ஊகத்துக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்துள்ளார். புதியதொரு கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் அடுத்துவரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.
தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றால் முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டு உள்ளதாக அறிந்து உள்ளார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்து உள்ளார்.
உடைகிறதா உதயசூரியன்?
உடைகிறது உதயசூரியன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று Tamil Page உள்ளிட்ட சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்துள்ளார்.
அம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்!
சாப்பாட்டுக்கு இத்தனை அக்கப்போரா என கேட்காதீர்கள்!
யாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை நிர்வாகத்தால் பெயரில்லாத- அனாமதேய உணவகமொன்று நடத்தப்படுகிறது. நிர்வாக பதிவேடுகளில் பெயரில்லாத உணவகமாக அது இருந்தாலும், பொதுமக்களால் அம்மாச்சி உணவகம் என்றுதான் அது அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அம்மாச்சி உணவகமல்ல. இன்னும் பெயரிடப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடமாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லையென்பதே இன்றைய யதார்த்தம்.
ஏன் மாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லை?
ஒரு பொதுவுடைமையாளரின் சுயவிமர்சனம்
நாங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்ற எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். அவரது சமீபத்திய நூல்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த விமர்சனம், இப்போது தனிநூலாகவே விரிந்திருக்கிறது. ‘பொதுவுடைமையரின் வருங்காலம்’ புத்தகத்தை இந்திய கம்யூனிஸ இயக்கம் பற்றிய, அதன் தவறுகளிலிருந்து கிடைத்த பாடங்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலாகவே கருதலாம். கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு மிகப் பெரிய விவாதத்தை முன்னெடுத்து, தவறுகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது.