ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா

ஜனநாயகக் கட்சியின் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டின்போது, அப்போது இலினொய்ஸ் மாநிலத்தின் செனட்டின் உறுப்பினராக இருந்த 42 வயதான பராக் ஒபாமா, மிகச்சிறந்த உரையொன்றை ஆற்றினார். அந்த உரை தான், பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை உண்மையில் தொடக்கி வைத்தது என்று சொல்வர்.

(“ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா” தொடர்ந்து வாசிக்க…)

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

(“போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)

பாதயாத்திரையால் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரை காரணமாக பேராதனை மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கிடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

மட்டக்களப்பையே – ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே – அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள், இன்னமும் வந்துகொண்டிருக்கும் நிலையில், இவற்றுக்குப் பின்னாலுள்ள சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆராய்தல் அவசியமானது.

(“மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை(28) ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்

“இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா, அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார்.
மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை” என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்” என்றார்.

(“பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் a.f.c (பகுதி 52 )

பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார்.அன்னறைய நாட்டின் சூழ்நிலையில் அரச அதிபர் பதவிக்கு அடுத்ததாக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாக இருந்தது.அது உணவுத் தட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.மேலும் திருகோணமலை துறைமுக நகரம் என்பதால் பல வெளிநாட்டு உணவுக் கப்பல்கள் அங்கே வரும்.இவைகளைப் பொறுப்பேற்பது ,இங்கிருந்து உணவுகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது எல்லாம் அங்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியே.

(“பற்குணம் a.f.c (பகுதி 52 )” தொடர்ந்து வாசிக்க…)

மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள்.

(“மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல் அல்லது மீள எழுச்சிபெறுதல் தொடர்பான சாத்தியங்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் கூறியுள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.