போதைவஸ்திற்கு எதிராக…. ’’நாளையிலிருந்து முழு நாடுமே ஒன்றாக’’

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது