அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய ஜனாதிபதி மசூட் பெஸ்கிஸ்தான் தெரிவித்துள்ளார். பிரேரணையை ஈரானின் இடைக்கால தலைமைத்துவ சபை வெள்ளிக்கிழமை (06) அங்கிகரித்ததாக ஜனாதிபதி பெஸ்கிஸ்தான் இன்று கூறியுள்ளார். இதேவேளை அண்மைய நாள்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அயல் நாடுகளிடம் பெஸ்கிஸ்தான் மன்னிப்புக் கோரியுள்ளார்.