தலவத்துகொட – கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சந்தேக நபர்களால் திருடப்பட்ட மேலும் பத்து முச்சக்கர வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.