இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியும் வெற்றியும்!

(Maniam Shanmugam)

இலங்கையை மிரட்டி அடிபணிய வைப்பதற்காக பலம் பொருந்திய மேற்கு நாடுகளால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவைப் பெற்று ‘வெற்றி’ பெற்றுள்ளது. இந்த முடிவு முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்தத் தீர்மானம் இலங்கைக்குத் தோல்வி எனக் காட்டப்பட்டாலும், நீதி செத்துவிடவில்லை என்ற உண்மையும் இதில் பொதிந்து கிடக்கிறது.