குட்டையை குழப்புவாரா பசில்?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஞாயிற்றுக்கிழமை (20) நாடு திரும்பிய போது அவரை வரவேற்க, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பார்க்க, மக்கள் சாரிசாரியாக திஸ்ஸமகாராமையிலுள்ள ‘கால்டன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றமை நினைவுக்கு வருகிறது.