ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு திசைகள் குறித்த கேள்விகள், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்ற கட்சிகளின் அதன் பின்னரான நடத்தை என்பன, இந்தக் கேள்விகளின் நியாயத்தை அதிகரித்துள்ளன.