தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவே அவை. இப்பொழுது மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன, அல்லது பிரிக்கப்பட்டுவிட்டன.