மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 5

ஆனால் ஏதோ நான் மட்டுமே அப்படி ஒரு வாகனத்தை விற்றுக் காசாக்கி விட்டது போல ஊருக்கையும் வெளிலையும் இண்டைக்கி வரைக்கும் ‘பெஜிரொவ வித்தவர்தானே”, “பெஜிரொவ வித்துப் போட்டாரு, பெஜிரொவ வித்துப் போட்டாரு” ன்னு ஒரே கத.. நானும் எத்தின பேருக்கு எத்தின தடவதான் இதுக்குவிளெக்கம் சொல்ற..! பெரும் கணஹாட்டா கெடக்கு இது எனெக்கி. அதனால மெய்யாலுமே என்ன நடந்தன்றத இண்டைக்கி கடைசியாவும் ஒரு தடவ சொல்றன் இப்ப…

பெஜிரொ ஒண்டு கிடைச்சது மெய். எனெக்கி அதெ ஓடயும் தெரியா. இஞ்ச வூட்ட கொண்டந்து வெக்க, ராவோட ராவா புலிகளுக்கு தகவல குடுத்திட்டானுகள். என்னடா செய்றன்னு ஒவ்வொரு வூடு வூடா போறேன், அப்பயும் அவனுகள் உட்றானுகளில்ல.. தேடித் தேடி திரியிறானுகள் பெஜிரொவ கொண்டு போக. இதெப் பத்தியெல்லாம் தகவல் குடுக்க ஆளிருக்கு இங்க இவருக்கென்ன பெஜிரோன்ட கோவத்தில. பொறவு பொலிஷில கொண்டு போய் போட்டுட்டன்.

அன்றாவு பஜிரோ ஹாபருக்கதான் கெடந்த. யோசிச்சி யோசிச்சி எனெக்கி ஏலா.. இவனுகள்றகண்லபட்டாலே தப்பேலாண்டு தெரிஞ்சி போச்சி.
அடுத்த நாளெ நானே போனென் புலிகள தேடி கிண்ணியடிக்குள்ள. பஜிரோ போகுது பெரிய பூன மாதிரி, ஆமி கேம்புக்க எல்லாம். எல்லானும் பாக்கானுகள் ஆர்ரா போற அது, எங்கடா போகுதுன்னு. போய் அங்க உள்ள ‘விசு’ண்டு ஒரு பொடியன் இரிந்தான். நான் அவனுட்ட சென்னேன் “விசு, நான் நாளெக்கி கல்முன வீதியாலகொழும்புக்கு போப் போறேன் கல்முனக்கிப் போய்ட்டு, நீங்க களுவாஞ்சிக்குடி அந்த மண்டூருக்கு இடப்பட்ட இடத்தில நில்லுங்க, எனெக்கி ஒரு வாகனம் ஒழுங்கு பண்ணி தந்துறுங்க ஒரு ஆட்டா எண்டாலும் நான் இஞ்சால திரும்பி ஊருக்க வ்ந்துக்கிறதுக்கு. அப்ப நீங்க என்னெயிம் பஜிரொவயிம் கடத்திட்டு போய் பஜிரொவ எடுத்துட்டு என்னெ மட்டும் உட்றுங்க, நான் அப்டியே ஊருக்க போறன்எண்டென்.

நான்சென்னதப்படியெ நூறு வீதம் அவனுகள் நம்பிட்டானுகள். நான் அப்டியே போய் அம்பாறயால போய் பயந்து பயந்துதான் போறேன் பெஜிரொவ எடுத்துட்டு.. இல்லல்லல்ல..இல்லல்ல… நேரெ திருப்பி பொலனறுவ ரோட்ல போட்டுட்டு கல்முன ரோட்ல வராம பொலனறுவ ரோட்ல போட்டு, இவனுகள் புலிகள் மாக்குபோய்லநிக்கெல்ல, நான்தான் முந்தியே தகவல் அனுப்பிட்டென் தான..

அதால அவனுகள் நிக்கல்ல. வேகமா நாங்க பொலறுவெக்கி பெய்த்தம். பொலனறுவைல போய் ஷாமிலாஸ் இப்றாஹிம்டு அவர்ர மில்லுக்கு உள்ளால பஜிரொவ போட்டுபெஜிரோவ வளெச்சி தவுட்டு மூடய அடுக்கி வெச்சிட்டம். இதெயும் இவனுகள் புறகு அறிஞ்சிட்டானுகள்.
கடும் கோவம் அவனுகளுக்கு. என்ரெ மகள் மாஜிதா அண்டெக்கி சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில அஞ்சாம் ஆண்டு புலமைப்பரிசில் சோதின எழுதப் போறண்ட விஷயத்த அறிஞ்சிட்டானுகள்.

இப்ப மாஜிதாவ கடத்துறதுக்கு வந்திருக்கானுகள். இவனுகள் புள்ளய தேடி முஸ்லிம் ஸ்கூலுக்கதான் போய்ருக்கானுகள். அவ இருந்த சிங்கள மகா வித்தியாலயத்தியாலயம் அவனுகளுக்கு தெரியா. பொறகு என்ரெ மனைவியும் மகளுமாக அங்கெ ரோட்ல வந்து நிண்டு பஸ்ல ஏர்றாப்போல ஏறி இடையில மன்னம்பிட்டில இவனுகள் சென்றில பாக்கிற எடத்துல ரோட்ல வந்த வேறொரு லொறிக்குள்ள ஏறி அப்டியே வந்து ஊருக்க எறங்கிட்டாங்க.

இப்ப அறிஞ்சிட்டானுகள் அந்த ஷாமிலாஸ் இப்றாஹிம்ட மில்லுக்கதான் பெஜிரோ கெடக்கெண்டு. அங்க போய் பாத்துருக்கானுகள் தவுடுதான் இரிக்கி.. அவரு மில்லுக்கார முதலாளி நல்லொரு வேல செஞ்சிருக்காரு. இவனுகள் போய் பெஜிரொவ கேட்டதும் “ச்சஹ், தம்பி மாரே நீங்க நேத்து வந்திரிக்கலாம்தான, இண்டக்கி காலெய்லதான் அஷ்ரப் ஸேரு கடிதம் அனுப்பிருக்காரு எஸ்ஸெல்லெத்துர பெஜிரோவ குடுங்க இங்க எனக்கு அது தேவயா இரிக்கின்னு.. றைவர் வந்து காலெய்ல அஞ்சி மணிக்கதான் எடுத்திட்டுப் போய்ட்டான் அப்டின்னு அவரு அத காப்பாத்தி தாறாரு.

இது எனெக்கி பெரிய தொல்லயா இரிக்கி. அப்ப ஒரு நாள் நான் கொழும்புக்கு போனாப்ல மன்சூர் மினிஸ்டர்ர எடத்துக்கு நான் போறேன். இஸ்ஸதீன் என்ன கூட்டிட்டு போறாரு. ‘ஆ, கவிஞர் வாங்க’ன்றாரு மன்சூர் மினிஸ்டர். இனி இஸ்ஸதீனும் மன்சூரும் சேர்ந்து அஷ்ரபுட பலாய கழுவுறாங்க.. எனெக்கி முகமெல்லாம்சுறுண்டு பெய்த்து.

‘இவரு இன்னமும் தலைவரோடஇரக்கமாத்தான் இரிக்காரு எலுவா இஸ்ஸதீன்’னு என்னப் பாத்து மன்சூர் கேக்காரு.

‘சரி, அது இரிக்க ஒனக்கு பெஜிரோ கெடெச்சிதா.. என்ன செஞ்சாய் ?
‘எனெக்கி ஓடயும் தெரியா ஒண்டுஞ் செய்ய தெரியா, என்ரெ பெஜிரோ தவுட்டு மூட்டெக்குள்ள கிடக்கு’
ஆ, அப்ப மன்சூர் செல்றாரு – இப்ப மன்சூர பத்தி கொஞ்சம் நல்லா செல்ல வேண்டி வந்திட்டு, நல்ல மக்கள நாம நல்லாத்தானெ செல்லொணும்.
‘டேய் அனிபா, இந்த பஜிரோ ஒனக்குச் செரி வராது, சூரியாரச்சிர பஜிரோக்கு என்ன நடந்தன்னு ஒனக்கு தெரியுமா ?’
‘ஓம் சேர் எனக்குத் தெரியும் அவர்ர சாச்சா வாழைச்சேனல இரிந்தவர்தான். அவர்ரெ சாச்சாட மகள்மேபல்ன்னு அங்கதான் என்னோட கூடப் படிச்சாள்.. எஸ்.பீ. பாலசுப்பிரமணியம் கொழும்பு கோல்பேஸ்ல இசைக்கச்சேரி
நடத்தின நேரம் சூரியாராச்சியும் கூட்டாளிகளும் அவங்கட பெஜிரோலதான் போய்ருக்காங்க அந்த ஷோ பாக்க. பஜிரோவ நிப்பாட்டி வெச்சிட்டு அவங்க போய் மேடைல இருந்து மியுசிக் பாத்திட்டு பஜிரோட்ட வந்தா பஜிரோ இல்ல, ஜேபிபி கார ஆக்கள் கடத்திட்டானுகள்’

‘ஒனக்கு பஜெரோ வேணாம், அத வித்துப் போட்டு வேலயப் பாரு, நானும்எண்ட பெஜிரொவ அஞ்சி லெச்சர்ருவாக்கு வித்துட்டென். என்ரெ மகன் ஒருவன் இரிக்கான். பொல்லாதவன். ஜப்பானுக்கு அனுப்புறண்டு பத்துப் பேரிட்ட அம்பதாயிரம் அம்பதாயிரம்னு வாங்கிப் போட்டான். நான் அந்த அஞ்சி லெச்சர்ரூவாயயும் அந்த பத்துப் பேருக்கும் குடுத்திட்டென். நீ ஒண்ட பெஜிரொவ கேக்குற ஆருக்காலும் குடுத்துப் போடு’
இப்ப இத விக்கலாமா விக்கப்படாதான்னு அவருட்டயிம் கேக்கல்ல, எனக்குப் பயம், அத வித்து அது புடிபட்டு பேப்பர்ல செய்தி வந்தா என்னடா நடக்கும்டு ஒரே யோசின எனெக்கி. அப்ப எங்கட சபாநாயகர் ராம் ராஜகாரியர்ர வீட்டதான் நான் நிக்கென் வெள்ளவத்தைல. அங்க அழகான சாப்பாடு எனெக்கி. அவர் என்னோட நல்ல முஹப்பத். அவரிட்ட போய் கேட்டா என்ன செய்வம்னு,

‘ஆ அதுல பெரெச்சன இல்ல, நீங்க குடுக்கப் போறீங்களா ?’
‘ஓ சேர், அதெ வெச்சிருக்க ஏலாதெ, எனெக்கிப் பெரும்பிரெச்சனயா கெடெக்கு, எனெக்கி கெரெஜ்ஜிம் இல்ல, றைவரும் இல்ல, வூடும் இல்ல, வாசலும் இல்லாம நான் அனாதயா திரியிறன், அப்ப அஷ்ரபும் இத என்ன செய்வம்டு கேக்காரும் இல்ல’
இப்டி நான் சொல்லயிம் ராஜகார்யர் என்னெ லேக் ஹவுஸுக்கு முன்னால போற அந்த ரோட்ல இரிக்கிற Director of Government Vehicles Supplies, அந்த டிரெக்டர்ர பேரு பண்டார, அவருக்கிட்ட என்ன கூட்டிக்கிட்டு போனாரு ராஜகார்யர்.
‘ஆ, வாடிவென்ன மன்த்றீ துமா’ன்னு மரியாதையா இரிக்க வெச்சாரு அந்த பண்டார ஸேர்.
ராஜகாரியர் இங்கிலீசுல பேசுறாரு, இவருக்கு பஜிரோவ விக்கோணும், விக்க பயமா இரிக்காம்னு ஷெல்றாரு. ‘அப்ப இவரு அரசியலுக்கு புதிசா’ன்னு பண்டார டிரெக்டர் என்னப் பத்தி ராஜகாரியர்ட கேக்குறாரு..
‘ஓண்ட வாகனத்த நீ விரும்புற ஆளுக்கு குடுக்கலாம், அப்டித்தான் ஜேயார் மாத்தயா இதெல்லாம் ஒழுங்கு படுத்தி இருக்காரு, நீ பயப்படத் தேவலை, வாகனத்து உரிய காசு கொண்டுவந்து இருக்கிறீங்களா?
‘ஓம் சேர், நான் காசு கொண்டு வந்திருக்கன்’
அவரு ஒரு க்ளாக்க கூப்பிட்டு என்னுடைய காசுக்கான ரிசீப்டு தயாராகிறது. எழுபத்தையாயிரத்து சொச்சம் ரூபா கட்டியாச்சி.
‘ஒங்கட ஆட்கள் எல்லாருமே பெஜிரோக்கு காசு கட்டாமத்தான் வித்துப் போட்டாங்க, அதுகள வாங்கிறவங்கதான் இங்க வந்து காசு கட்டிட்டுப் போறாங்கன்னு, இப்டி நீங்க மட்டும்தான் காசு கட்டி இருக்கீங்க’ என்று அவர்ரபாஷைல கதைக்காரு…
அப்ப இதெல்லாம் அப்டி போகக்கொள:
“ஒங்கட தலைவருக்கு என்னோட ஒருபிரச்சின,அதை நீங்க தீர்த்து வைக்க மாட்டீங்களா ?”
“எங்கட தலைவரோட ஒங்களுக்குப் பிரச்சினையா ? அப்டி இரிக்காதே..சரி, என்ன சேர் பிரச்சின ?”
“ஒரு நாள் ஒங்கட தலைவர் எனக்கு கோள் பண்ணி சில வாகனங்கள் தரச்சொல்லி கேட்டாரு, நான் மெல்ல விளங்கப் படுத்திச் சொன்னேன் “நீங்கள் இப்படி என்னிடம் தொலைபேசி ஊடாக வாகனங்கள் கேட்பது விதிமுறைக்கு உட்பட்டதல்ல, நான் அப்படி உங்களுக்கு வாகனங்கள் தருவதற்கும் எனக்கு அதிகாரம் இல்லை. எத்தனை வாகனங்கள் வேண்டுமானாலும் நான் தரலாம், ஆனால் அதற்கான அனுமதியை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தர வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை செய்யுங்கள். அதன் பிறகு அதற்கான அனுமதிக் கடிதத்தைப் பெற்று எனக்கு அனுப்பி வையுங்கள், அதன் பின்னர் நான் அந்த வாகனங்களைத் தரலாம்’ என்று விளக்கிச் சொன்னேன். ஆனால் உங்கள் தலைவர் அன்றிலிருந்து கொஞ்சம் கடுப்பில் உள்ளார் என்னுடன்’ என்கிறார் பண்டார. மேலும் ‘உங்கள் கட்சித் தலைவருக்கு இவ்வளவு சின்னச் சின்ன அரச நிர்வாக ஒழுங்கு விதிகளாவது தெரியாதா?’ ன்னு ஒருவித ஏளனமாகக் கேட்கிறார் என்னிடம்… எனெக்கி வெட்கமாப் போச்சுது… ‘சேர், நாங்க அரசாங்க ஊழியர்கள். தாபனக் கோவை மற்றும் நிதியியல் விதிகள் குறித்துப் பரீட்சைகளுக்காவது படித்திருக்கிறோம். தலைவர் புகழ்பெற்ற வழக்கறிஞர், அவருக்குச் சிலவேளை இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்கள் சிலவேளை மறந்திருக்கலாம்னு மழுப்புகிறேன். தலைவர் மிகப்பெரும் ஆளுமையும் பரந்த சட்ட அறிவும் நிறைந்தவர்தான், அதேவேளை இவ்வாறான அடிப்படை நடைமுறை விஷயங்களில் தெளிவில்லாமலும் இருந்திருக்கிறார்..
அப்படியான பலவீனமெல்லாம் அவருக்கிட்ட இருந்தது. அதாவது தான் தலைவர் என்றால் மற்ற எல்லோரும் தனக்குக் கீழ்படிந்து நடந்து கைகட்டி வாய்பொத்தி நடந்துகொள்ள வேண்டும் என்றொரு கண்ணோட்டத்தில்தான் எப்போதும் செயற்பட்டுள்ளார். பண்டார நாயக்காவின் வீட்டிலும் இந்த அரச வாகனங்கள் வழங்கல் செயலகத்தின் பணிப்பாளரிடத்திலும் ஒரேவிதமான தவறு நடந்துள்ளது.
இப்படியான ஒரு நாளைல எங்கட தம்பி, எங்கட ஊர் ஆட்களெல்லாம் தலைவரைக் காணச் சென்றுள்ளார்கள். அப்போது தலைவர் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர்கள் போகும்போது தலைவர் காரில் வந்து இறங்கினாராம். அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த எனது தம்பியார் “என்ன மடத்தனம் செஞ்சி போட்டீங்க காக்கா நீங்க,ஏன் அஷ்ரப்புட்டுவிலகின தலைவர் காரில் வந்து இறங்கின காட்சிய நீங்க கண்ணால கண்டிருக்க வேணுமே, இறங்கி நடந்து வந்தாரு, சாந்தி படத்தில சிவாஜி கணேசன் நடப்பாரே அந்த நடை நடந்து வந்தாரு, அந்த மாதிரித்தான் இருந்தாரு, தலைமுடி மட்டும் இருந்திருந்தால் அச்சு அசல் சிவாஜியேதான் என்று ஆனந்தத்தில் புகழ்ந்து தள்ளினார். நான் தொண்டையைக் காறி “தூ”என்று துப்பிவிட்டுச் சொன்னேன். “நாய்களா ! என்னடா பேசுறீங்க ?அவரு சாந்தி படத்தில சிவாஜி கணேசன் நடப்பது போல நடக்கிறத்துக்காடா அவரை நாம தலைவராக்கினோம் ? நீங்கள் எல்லாம் தோளில் சுமந்து திரிஞ்சீங்க கழுதைகாள் ! எங்கட லட்சியமென்ன அவர் இப்ப செய்ற வேலென்னடா ?’ன்னு ஏசிப் போட்டேன்.
அந்தக் காலப் பகுதியில் அவர் சந்திரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்த போதுதான் “வெள்ளைக் காகமும் வீர வாள்களும்” என்றொரு பயங்கரமான சிறுகதையை நான் சரிநிகரில் எழுதுகிறேன். அந்தக் கதை ஆருக்கும் விளங்கல்ல, வ.அ.இராசரத்தினம்விளங்கிட்டுது.. “நீ அஷ்ரபைப் பற்றித்தானே இந்தக் கதையை எழுதி இருக்கிறாய் ?” என்று அவர் எனக்குக் கடிதம் எழுதுகிறார்…
(தொடரும்..)