அடுத்தவர் சட்டியை அல்ல; உங்கள் சட்டியில் கருகுவதைப் பாருங்கள்

எவ்வளவுதான் புத்திமதியைக் கூறினாலும், சிலருக்கு அவையெல்லாம் ‘செவிடன் காதில் ஊதிய சங்காகும்’. நாம் என்ன செய்கின்றோம் என்பதை விடவும், அடுத்தவர் என்ன செய்கின்றார் என்பதைப் பார்த்துப் பார்த்தே, சிலர் காலத்தைக் கழித்துவிடுகின்றனர். இது, ஒவ்வொரு துறைகளுக்கும் பொருந்தும்.