பறவைகளின் தற்கொலை

இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இதற்காக ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.

ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.

உள்ளுர் பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
மலைகள் மற்றும் பள்ளதாக்குகள் நிறைந்த பகுதியாக உள்ள அசாம் மாநிலம் ஜாதிங்கா கிராமத்தை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் மீன்கொத்திகள், பிளாக் பிட்டர்ன்ஸ், புலிபிட்டான்ஸ், பான்ட் ஹார்னஸ் மற்றும் இதர சிறிய வகையிலான குருவிகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வசித்து வருகின்றன.

இங்கு வந்து தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் முடிந்து வெளியேறியவுடன். இங்குள்ள உள்ளுர் பறவைகள் சற்றே நிலை தடுமாறி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கின்றன.

குறிப்பாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று பெரும் குழப்பத்திற்கு ஆளாகிடும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரவு 7மணி முதல் 10மணி வரை வெகு உயரத்தில் குரலெழுப்பியபடி பறக்கின்றன.பின்னர் கிராமத்தில் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கம்பங்களில் வேகமாக வந்து மோதி படுகாயமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றன.

பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் கடந்த 100ஆண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜாதிங்காவில் வசித்திடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த பறவைஇன ஆராய்ச்சியாளர்கள் ஜாதிங்கா பகுதிக்கு வருகைதந்து பலஆண்டுகளாக அதே பகுதியில் முகாமிட்டு ஆய்வுகள் மேற்கொண்டும் பறவைகளின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய இயலவில்லை.

இருப்பினும் விளக்கு கம்பங்களின் ஒளிஈர்ப்பு, மூடுபனி, பறவைகளின் தடம்மாறுதல், நிலத்தடி நீரின் காந்த குணங்கள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை தொரிவித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க ஜாதிங்கா பகுதியில் செப்டம்பர் அக்டோபர் மற்றும் மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் வானத்தில் பறந்திடும் அசுத்த ஆவிகளால் கலவரமடையும் பறவை இனங்கள் தப்பித்து செல்வதற்காக வெளிச்சம் நிறைந்த மின்விளக்கு கம்பங்களை நோக்கி ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கில் விரைந்து வந்து மோதுவதில் படுகாயமடைந்து உயிரிழப்பதே பறவைகள் தற்கொலை என்று கூறப்படுவதாக உள்ளுர்;வாசிகள் சிலர் சொல்கின்றனர்.

மேலும் பறவைகள் தற்கொலை காலத்தில் விளக்கு கம்பங்களில் மோதி அடிபட்டு கிடக்கும் பறவைகளை உணவுக்காக ஜாதிங்கா பகுதி மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இருப்பினும் ஜாதிங்கா பகுதியில் பறவைகள் அதிகளவு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் பறவைகள் இன ஆய்வாளர்களும் தவித்து வருகின்றனர்.

இதனால் தான் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்கா பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வருகிறது.
உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாயத்துக் கொள்ளும் நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்காவில் மின்விளக்கு கம்பத்தில் மோதி பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு புரியாத புதிராக உள்ளது.