அப்புத்தளையில் மாபெரும் போராட்டம்

பெருந்தோட்ட கம்பெனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்க்கு பதிலடி கொடுக்கும் நோக்குடனும்  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, விவசாயிகளை பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ், அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கைத் திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது. குழந்தைகள் குடிப்பதற்க்கு பால் மா இல்லை அரிசி தட்டுப்பாடு உரத்தட்டுப்பாடு பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

 மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள்  பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம் இது முடிவல்ல ஆரம்பம்  என்றார்.