ஆடைத் தொழிற்றுறையை கட்டிக்காப்பது அவசியமாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், உயர்தரம் கற்பதற்கு தேவையான பெறுபேறுகள் கிடைக்காவிடின், பெரும்பாலானவர்களின் முதல் தெரிவு ஆடை தொழிற்றுறை ஆகத்தான் இருக்கும். சிலர், பரீட்சை நிறைவடைந்த மறுநாளே, ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுவர்.