இத்தாலியில் உள்ள இலங்கையருக்கு சிக்கல்

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் முறையின் மூலம் பெருமளவானோர் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த முறைமை செயற்படுத்தப்படாமை காரணமாக, ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த விசேட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மீண்டும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.