இலங்கை: கொரனா செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 11 ஆண்களும் 12 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,205 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 04 பேரும் 30 வயதுக்குட்பட்டோரில் ஒருவரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, திகதி மற்றும் ஏனைய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் வழங்கப்படவுள்ளது.