இலங்கை: கொரனா செய்திகள்

அதன்படி,  371,992 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 50,752 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 431,519 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,775 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையான நிலையில் உள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மிகவும் பிறழ்ந்த பதிப்பாக இது இருக்கலாம் என்றும் தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளைத் தவிர்க்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இந்த பிறழ்வு கண்டறியப்படவில்லை என்றாலும் இந்த மாற்றங்கள் உலகளவில் வேகமாக பரவி வருவதால் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ஆய்வின்படி, தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சி .1.2 மாறுபாடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற அனைத்து கொரோனா மாறுபாடுகளையும் விட அதிக தொற்றுநோயாக இருக்கலாம் என்றும் தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளைத் தவிர்க்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவைத் தவிர, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் சி .1.2 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகையை விட சி .1.2 மிகவும் ஆபத்தானதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.