ஈரான் புதிய ஜனாதிபதியாக றைசி பிரகடனம்

1979ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கான குறைந்தளவு வாக்களிப்பு இதுவாகும். 28,933,004 வாக்குகளை றைசி பெற்றிருந்தார்.

தேர்தலில் இரண்டாவது இடத்தில் 3,726,870 வாக்குகளுடன் வலிதற்ற வாக்குகள் காணப்பட்டிருந்தன. இஸ்லாமியக் குடியரசு உருவாக்கப்பட்ட பின்னர் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

நேற்று இடம்பெற்ற இத்தேர்தலில் மூன்றாமிடத்தை முன்னாள் புரட்சிகர காவலர் தளபதி மொஹ்சென் றெஸயி பெற்றிருந்தார். நான்காமிடத்தை, 2,427,201 வாக்குகளுடன் மிதவாத வேட்பாளரான அப்துல்நஸாவர் ஹெம்மடியும், ஐந்தாமிடத்தை 999,718 வாக்குகளுடன் கடும்போக்குவாதி அமிர் ஹொஸெய்ன் கஸிஸடெஹ் ஹஷெமியும் பெற்றனர்.

இந்நிலையில், இவ்வாண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் றைசி பதவியேற்கவுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டிலேயே ஐக்கிய அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவராக றைசி காணப்படுகின்றார்.