உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது. அந்த நகரும் குறித்த சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு ஆய்வுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர். அவர்களை தவிர்த்து சொற்பமானவர்களே அண்டார்டிகா பகுதியில் உள்ளனர்.
