கரூர் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சென்னை காவல் ஆணை​யர் அருண் நேற்று ஒரு செய்​திக்​குறிப்பு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரூரில் நடை​பெற்ற அரசி​யல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்​வித வதந்​தி​யை​யும் பரப்ப வேண்​டாம். விசா​ரணை அடிப்​படை​யில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில், வலை​தளங்​களில் சிலர் பரப்​பும் பொய் செய்​தி​கள் பொது​மக்​கள் அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் அமை​கிறது.

இதுதொடர்​பாக பெறப்​பட்ட புகார்​களின்​பேரில், பொது வெளி​யில் வதந்தி பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.