கரூர் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் குறித்து வதந்தி பரப்​பிய​தாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்பட்டுள்ளது. பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் வலை​தளங்களில் பதி​விடு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்சரித்துள்ளார்.