கறுப்புக் கொடி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் மூவருக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.