கள்ளக்குறிச்சி: 3 தலைமுறைகளுக்கு பின் கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்கள் – டிஐஜி தலைமையில் 300+ போலீஸ் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஆதிதிராவிட பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக வரதராஜ பெருமாள் கோயிலில் சென்று வழிபட அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வைகுண்ட ஏகாதசியான இன்று ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி எஸ்.பி.பகலவன், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீஸார் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனர்.