காரைநகரில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைதாகினர்

காரைநகரை அண்டிய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு ரோலர்களில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டு, மயிலிட்டி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகுகள், கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகிலிருந்த மீனவர்களுக்கு கொரோனா தொற்று  தொடர்பிலும் மலேரியா தொற்றுத் தொடர்பிலும் சுகாதாரத் துறையினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த 22 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.