கிளிநொச்சியில் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையின் தொழில்நுட்பப் பங்களிப்பு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, கடற்படை இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து (1155) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் ஏராளமான மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவையை, புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஊடாக இனி எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.

Leave a Reply