கிளி. சிறுபோகத்துக்கு மொனராகலை உரம்

சிறுபோக நெற்செய்கைக்கான முன்னேற்பாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நிலப் பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கால தாமத நிலை  காணப்படுகின்றது.

இதனால் விவசாயிகள்  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், மேற்படி உரம் வரவழைக்கப்படவுள்ளது.

அதேவேளை, இவ்வாறு சேதன உரத்தை ஏற்றி வரும் 600 லொறிகளுக்கும்  தலா 250 லிட்டர்  டீசல் வீதம் எரிபொருள் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.