கொரோனா செய்தித் துளிகள்

பொகவந்தலாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்டப் பகுதிகளில், 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 51 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக உயர்வு. நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3481ஆக உயர்வு. நாவுல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி. தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 65) கொரோனாவால் மரணம்.