சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

மூதூர் கிழக்கு – சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை  (7) அன்று  மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.