சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் சாதனை

வெற்றிப்பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 28 ஆம் திகதி  அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது  பிரதமர் தினேஷ் குணவர்த்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,  3 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடமும் அமைத்துவழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் குறித்த பாடசாலை மாகாண மட்டத்தில்  முதலிடம்
பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் நடன ஆற்றுகையும்
இந்நிகழ்வில் இடம்பெற்றது. மேலும்  சிறப்பாகச் செயற்பட்ட கழகத்துக்கான விருது தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு  வழங்கப்பட்டது.