சு. க பேரணியில் வாள்வெட்டு குழுவினர்; ஒருவர் கைது

இந்நிலையில், வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பொலிஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த இருவர், குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணக் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், பேரணியில் கலந்துகொண்ட இருவரையும் கைதுசெய்வதற்கு முயற்சித்த போது, ஒருவர் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.