சேதனப் பசளையிட்டு செய்கை வெற்றி

நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இடைக்கால உப உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு அமைய விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமைய இவ்வாறு பாசிப்பயறு பயிரிடப்பட்டதுடன் இதற்கு முற்றுமுழுதாக சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டன.

தற்போது இதன் விளைச்சல் அதிக அளவில் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் இவ்வாறான உப உணவுப் பயிர்களை மேற்கொள்வதன் ஊடாக விவசாயிகள் மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதோடு நாட்டின் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.