தங்காலையில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் லாரி பறிமுதல்

தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவால்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.