தடையில்லா மின்சாரம் குறித்த தகவல்

தலா 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றிய மூன்று நிலக்கரிக் கப்பல்கள் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 17,18 மற்றும் 19ஆவது கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு தடையில்லா மின்சாரம் வழங்குவதை நிலக்கரி இறக்குமதி உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.