தடை நீக்கப்பட்ட ஆறு புலம்பெயர் அமைப்புகள்

ஐ.நா பாதுகாப்புச் சபையின்  1373 மாநாட்டின்   கீழ், தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட  குறித்த ஆறு அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு – திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு – கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு  நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பரிந்துரைகளுக்கு அமைய ,கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.