திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.