துவிச்சக்கர வண்டி பாவனைக்கு தனி ஒழுங்கை

துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மாற்றீடாக மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துபவர்களுக்காக தனியான ஒழுங்கைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட செயற்பாடாக ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை ஊடாக கொழும்பு துறைமுக நுழைவாயில் வரையான மருங்கை துவிச்சக்கரவண்டி பயன்பாட்டிற்காக அடுத்த வாரம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.