தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

ஹிங்குராங்கொடை பொலிஸ் துறையினரின் கூற்றுப்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) இரண்டு ஊழியர்கள் அளித்த தனித்தனி புகாரைத் தொடர்ந்து, யடியல்பத்தன பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்க சந்தேக நபரின் சகோதரரின் வீட்டிற்கு தொழிலாளர்கள் சென்றதாக கூறப்படுகிறது, அப்போது உள்ளூர் பிரதிநிதி அவர்களை அச்சுறுத்தி தடுத்ததாகவும், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சந்தேக நபர் தனது சகோதரர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி, அவரை விடுவிக்கக் கோரி பலத்தை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் புதன்கிழமை(5) அன்று ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்