தொண்டமான் பெயர் விவகாரம்: சீறி பாய்ந்தார் ஜீவன்

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு என அரசின்  மலையகப்  பிரதிநிதி குறிப்பிடுகிறார். அவர் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் இவர் சபைக்கு வந்து வாய்கிழியப்  பேசுகிறார் என்றார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23)  இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்த சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்  மேலும் பேசுகையில்,

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகாரத்த மண்டபம் பற்றி இன்று வெள்ளிக்கிழமைசபையில் பேசப்பட்டது. 2005 ஆம் ஆண்டே இந்த ஞாபகார்த்த மண்டபம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சராக பதவி வகித்தார் . ஆகவே உண்மையை மறந்து விட்டு பேச வேண்டாம்