‘நீக்குவதற்குக் காரணம் இல்லை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கு, எந்தவொரு காரணமும் இல்லையெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது செயற்பாடுகளால் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.