நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?

‘X’ல் பதிவொன்றையிட்ட பிரேமதாச, மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் சமீபத்திய திட்டத்தைத் தொடர்ந்து நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற வதந்திகள் பரவியதாகக் கூறினார்.

“இன்று பாராளுமன்றத்தில் அமைதியாக்கப்பட்டேன், எனவே நான் இங்கே கேட்கிறேன்: 33% குறைப்பு வாக்குறுதியளிக்கப்பட்ட பிறகு மின் கட்டணங்கள் 18.3% உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டது, இப்போது தண்ணீர் கட்டண உயர்வுகள் அடுத்ததாக வதந்திகளாக உள்ளன. அவை எப்போது வரும், ஏற்கனவே சிரமத்தில் உள்ள வீடுகளை அவை எவ்வளவு கடுமையாகப் பாதிக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.