பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட ஆளும் கட்சியினர் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எவ்வாறாயினும், பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித ஆயத்தங்களும் இடம்பெறவில்லை என பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.