புகையற்ற அடுப்பு கண்டுபிடிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் இக்காலகட்டத்தில், எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய புதிய வகை  அடுப்பினை மாவட்ட  அரசாங்க அதிபர் க.கருணாகரன்  அவர்களுக்கு  அறிமுகபடுத்தியதுடன், இதன் செயல்திறன் தொடர்பாக  விளக்கமளித்திருந்தார்.  

இந்த புதிய வகை அடுப்பின் பாவனை  தற்போதைய  கால கட்டத்தில் தேவை கருதி தான் இதனை உருவாக்கியதாக இதன் போது குறித்த உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம்  துண்டிக்கப்படும் நேரத்தில் கூட  இந்த அடுப்பினை பாவனைக்கு உட்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டுள்ள இக் காலகட்டத்தில் புதிய புகையற்ற அடுப்பினை பாவனை செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.