பொதுத் தேர்தலில் வெற்றிக்கு உரிமை கோரிய நோர்வே பிரதமர்

நோர்வேயின் தொழிலாளர் கட்சி பிரதமர் ஜூனோஸ் கார் டுடு திங்கட்கிழமை (08) சட்டசபைத் தேர்தல்களில் வெற்றிக்கு உரிமை கோரியுள்ளார். இத்தேர்தலில் குடியேற்றத்துக்கெதிரான பிரபலமான முன்னணிக் கட்சியின் ஆதரவும் எப்போதுமில்லாதளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 28 சதவீத வாக்குகளுடன் தொழிலாளர் கட்சி முன்னிலைக்கு வந்த நிலையில், மற்றைய நான்கு இடது சாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் டுடு பதவியில் தொடர முடியும்.