போயிங்கின் 737 மக்ஸ் 8 பல நாடுகளால் தரையிறக்கம்

அந்தவகையில், உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள், ஒரு கட்டத்தில் நேற்று முன்தினம் 13.5 சதவீதம் சரிந்திருந்ததுடன், இறுதியாக ஐந்து சதவீத சரிவுடன் பங்குச்சந்தை முடிவுக்கு வந்த நிலையில், பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்களை அந்நிறுவனம் இழந்துள்ளது.

இந்நிலையில், போயிங் 737 மக்ஸின் மிகப்பெரிய சந்தையான சீனாவிலுள்ள 97 ஜெட்கள் உள்ளடங்கலாக, தற்போது சேவையிலுள்ள 371 ஜெட்களில், ஏறத்தாழ 40 சதவீதமானவை தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

157 பயணிகளுடன் சென்ற எதியோப்பியன் எயார்லைன்ஸின் போயிங் 737 மக்ஸ் விமானம் நிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டதே தற்போதைய மேற்குறித்த நிலைக்கு காரணமாகும்.

அந்தவகையில், வேறு நான்கு 737 மக்ஸ் 8 விமானங்களைக் கொண்டிருக்கின்ற எதியோப்பியர் எயார்லைன்ஸ், முன்னெச்சரிக்கையொன்றாக அவற்றைத் தரையிறக்குவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பிரேஸிலுள்ள கோல் விமானநிறுவனமும் ஆர்ஜென்டீனாவின் அரச விமானநிறுவனமான ஏரோலினெயாஸ் ஆர்ஜென்டீனாவும் மெக்ஸிக்கோவின் ஏரோமெக்ஸிக்கோ விமானநிறுவனமும் மக்ஸ் 8 விமானங்களை இடைநிறுத்தியுள்ளன.