மன்னாரில் இயல்பு நிலை பாதிப்பு…

மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் நகர சபை பகுதியில், மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மந்த கதியில் இடம் பெற்று வருவதன் காரணத்தினால் வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.