‘மாகாண சபைத் தேர்தல் குறித்து வியாக்கியானத்தை கோரவும்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அக்கடித்தை அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதால், அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேற்படி விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படமுடியும். அதனால்தான், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிலைமையை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியிடம், அக்கடிதத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது. அதற்கான இயலுமையும் உள்ளதென மஹிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.