மாலத்தீவு டின் டுனா அன்பளிப்பு

பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மாலத்தீவிலிருந்து இன்று ஒரு தொகுதி டின் டுனா மீன்கள் பெறப்பட்டன, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இந்த சரக்கில் 14 கொள்கலன்களில் 25,000 பெட்டிகள் டின் டுனா மீன்கள் உள்ளன. இந்த சரக்கு மாலத்தீவு உயர் ஸ்தானிகரால் கொழும்பிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.